மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் அப்பகுதி பெண்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலாஜி நகர் பகுதியில் உள்ள கம்பிகுடி கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.