மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியில் உள்ள தியாகி கக்கனின் நினைவுமண்டபத்தில் அவரது 43ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. தும்பைப்பட்டியில் பிறந்த சுதந்திர போராட்ட வீரரும், பொதுப்பணித்துறை, காவல்துறை, சிறைத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட 12 துறைகளின் அமைச்சராக இருந்தவருமான கக்கனின் திருவுருவ சிலைக்கு, அரசின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.