நீட் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் சென்னையில் இன்று தொடங்கப்படுகிறது. இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, நீட் தேர்வு என எந்த தேர்வாக இருந்தாலும் மாணவர்களின் மன சோர்வை குறைக்க கவுன்சிலிங் அளிக்கப்படும் என தெரிவித்தார்.