நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சாலையோரம் நின்ற பொலிரோ வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர், 6 பேர் படுகாயமடைந்தனர். மதுரையில் இருந்து நாமக்கல் வழியாக குஜராத் நோக்கி சென்றுகொண்டிருந்த காரில் குஜராத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்தனர். பரமத்தி வேலூர் அருகே சாலையோரம் நின்று உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, கொச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, கார் மீது மோதியது.