Also Watch
Read this
By: Manigandan Raja

அடாவடி வசூல் நடைபெறுவதாக புகார் :
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி தமிழக ஆந்திர எல்லைப் பகுதி வழியாக தினந்தோறும் வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான லோடு வேன்கள்
கனரக இலகுரக வாகனங்கள் கண்டெய்னர் லாரிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் இரவு நேரங்களில் தனியார் வாகனத்தில் ஆர்டிஓ என பலகை வைத்து தினந்தோறும் இரவில் வரும் வாகனங்களை நிறுத்தி வாகன தணிக்கை என்ற பெயரில் ஆவணங்கள் சரி பார்ப்பதாக கூறி அந்தப் பகுதியை சேர்ந்த லோக்கல் நபர்கள் தலா வாகனத்திற்கு 300 முதல் ஆயிரம் வரை வசூலித்து வந்த நிலையில்.
நேற்று தனியார் வாகன ஓட்டுநர் கட்டாய வசூலில் ஈடுபட்ட நபர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved