மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் பரிசுத்தத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால், திமுக கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள் என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற பாஜக கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 கோடி ரூபாய்க்கு திமுகவிடம் அடமானத்தில் இருப்பதாக விமர்சித்தார்.