Also Watch
Read this
Posted on: Nov 27, 2025 01:37 PM
By: Web Team

தமிழ்நாட்டுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், கனமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved