Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் அருகே ஆட்டோ திடீரென குறுக்கே வந்ததால் அரசு பேருந்து நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கிய சிசிடிவி காட்சி வெளியானது.
ரயில்வே மேம்பாலம் அருகே அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்று திடீரென சாலையில் குறுக்கே வந்ததால்,
அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை வலதுபுறமாக திருப்பியுள்ளார்.
நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் பேருந்து இறங்கி நின்றது. இந்த விபத்தில், பயணிகள் காயமின்றி தப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved