ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தனியார் உடை மாற்றும் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமேஸ்வரம் டி.எஸ்.பி. சாந்தமூர்த்தி, தனியார் உடை மாற்றும் அறையில் சிசிடிவி கேமரா இருப்பதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அங்கு ஆய்வு செய்ததில் கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.