தஞ்சை மாவட்டம் பழமார்நேரி பகுதியில் ஆழ்துளை குழாய் கிணற்றில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருவதால் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அம்மன் நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 300க்கும் மேற்பட்டோருக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த காவிரி குடிநீர் கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.