வட சென்னை எண்ணூர் கொற்றலை ஆற்றில் கருநிறத்திலான எண்ணெய் கலந்திருப்பதால் மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொற்றலை ஆற்றில் தொழிற்சாலைகளிலிருந்து சுடு நீர் வெளியேற்றப்படுவதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில் கருநிறத்திலான எண்ணெய் போன்ற பொருள் தற்போது கலந்திருப்பது ஆற்றை நம்பியிருக்க கூடிய மீனவர்களிடையே பேரிடியாய் உள்ளது.