பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காஞ்சிபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பாஜகவினர் அஞ்சலி செலுத்திய போது, அவர்களது கையில் இருந்த பேனரை போலீசார் பிடுங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் பஹல்காமில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி, மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்களிடம் இருந்த பேனரை போலீசார் பிடுங்கி சென்றதால் பாஜகவினர் வாக்குவாதம் செய்தனர். முன்னதாக, பாகிஸ்தான் அரசால் ஊட்டி வளர்க்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்கள் ஆத்மா சாந்தியடைந்த வேண்டும் என பாஜவினர் வைத்திருந்த பேனரையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.