கோயில் பொங்கல் திருவிழா : திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள பட்டத்தரசியம்மன், ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள் மற்றும் ஸ்ரீ நயினார் சுவாமி பொங்கல் திருவிழா கடந்த 8-ம் தேதி துவங்கியது. நாள்தோறும் சுவாமி ஊர்வலங்கள், பூ பெட்டி சுமத்தல், குதிரை காணிக்கை எடுத்தல், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. மூன்றாம் நாளான இன்று குப்பாண்டம்பாளையம் ஊர் பொதுமக்கள் தங்கள் உறவினர்களுடன் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு. கருப்பராயர் சுவாமிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நேர்ந்து விட்ட கிடாக்களுடன் கோவிலில் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். Related Link ஒடவும் முடியாது, ஒளியவும் முடியாது....