Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மகப்பேறு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தையை திருடி செல்ல முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்திலி கிராமத்தை சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த 6ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், இன்று அதிகாலை லட்சுமி என்பவர் குழந்தையை திருடி கொண்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அருகிலிருந்தவர்கள் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய நிலையில், தனது குழந்தையை காணவில்லை என திவ்யா பதறியதையடுத்து, குழந்தை திருட்டு குறித்து தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved