Also Watch
Read this
By: Manigandan Raja

இளைஞர் மீது தாக்குதல் :
சென்னை, மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலையில் காலி மைதானம் புறா சங்கர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அவருக்கு தெரிந்த நான்கு பேர் ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ கார்த்தி என்பவரை பற்றி விசாரித்துள்ளனர்.
அதற்கு ஏதும் தெரியாது என்று கூறிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சங்கரின் தலை,முகம் முதுகு ,கை மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக அந்த கும்பல் வெட்டி உள்ளது இதனிடையே அங்கிருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள சங்கர் தப்பி சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது உள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை முயற்சிக்கான சம்பவம் குறித்தும் சங்கரை வெட்டிய நபர்களை தீவிரமாக தி
வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved