Also Watch
Read this
Posted on: Apr 29, 2025 04:50 AM
By: Srini Vasan

தஞ்சாவூர் அருகே நடைபெற்ற அமுதுபடையல் விழாவில் 200 மூட்டை அரிசி மற்றும் 4 டன் காய்கறிகளை கொண்டு உணவு தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
வேப்பத்தூர் ஆத்தீஸ்வரசுவாமி கோவிலில் நடைபெற்ற அமுதுபடையல் விழாவில், தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் சமபந்தி அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவு அருந்தினர்.
மேலும், குழந்தைப் பேறுக்காக பிரார்த்தனை மேற்கொண்ட பெண்கள், அமுதுபடையல் உணவை சேலைத் தலைப்பில் வாழை இலை வைத்து மடிப்பிச்சையாக வாங்கி, குழந்தைகளுக்கு ஊட்டி தாங்களும் உண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved