Also Watch
Read this
By: Web Team

நாகப்பட்டினம் மாவட்டம் பொருள்வைத்தசேரியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ண காளியம்மன் கோவிலில், ஆடித் திருவிழாவின் ஒரு பகுதியாக திரு நடனக் காட்சி நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆடிப் பெருவிழா காப்பு கட்டி பூச்செரிதலுடன் துவங்கிய நிலையில், நாள்தோறும் சிறப்பு வைபவங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒருபகுதியாக சொர்ண காளியம்மன் திரு நடனக் காட்சி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் இசைத்தபடி முன்னே செல்ல, காளி வேடமிட்ட பக்தர் அதற்கேற்ப நடனமாடியபடி சென்றார்.
தொடர்ந்து காளி வல்லான் எனும் சாகாவரம் பெற்ற அசுரனை, அம்மன் வதம் செய்யும் படுகள நிகழ்ச்சியும் தத்ரூபமாக நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved