திருப்பூர் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேத்தை முன்னிட்டு, திரளான பெண்கள் முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பெண்களின் காவடியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்றது. பின்னர், முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.