நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே நடைபெற்ற நாணய கண்காட்சியில் பழங்கால நாணயங்கள், செப்பேடுகள், வரலாற்றுச் சின்னங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆழியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் மரபு மன்றம் சார்பில் கண்காட்சி நடைபெற்றது. இதில் சங்க கால நாணயங்கள் முதல் தற்போதைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்ப், ஓவியங்கள், பழம்பொருட்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் தமிழகத்துடன் வணிகம் செய்த யவனர்களின் ரோம, கிரேக்க நாணயங்கள், இந்தோ கிரேக்க நாணயங்கள், விஜயநகர பேரரசு, மைசூர் உடையார் காலம் என, வரலாற்றுச் சிறப்பு மிக்க நாணயங்கள் இடம்பெற்றன.