புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடியில் உள்ள வேண்டி வந்த அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வழிபாடு நடத்தினர். மேலும் சிலர் கரும்புத் தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.