பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து மர்ம நபர் உண்டியலை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கீழப்புலியூர் கிராமம் சிலோன் காலனி பகுதியில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த ஒரு சவரன் தாலி மற்றும் சுமார் 25 ஆயிரம் ரூபாய் இருப்பததாக சொல்லப்படும் உண்டியலை திருடி சென்றதாக கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.