காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற அதிமுக நிர்வாகியை பணியில் இருந்த எஸ்.ஐ ஆபாசமாக பேசி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியானது. பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அம்மு என்பவர் வாலாஜாபாத் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக புகார் அளிக்க அம்முவின் மகளை அழைத்துக் கொண்டு அந்த பகுதி அதிமுக நிர்வாகி ரவி காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ சிலம்பரசன், ரவியை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார்.இதையும் படியுங்கள் : தேங்காய் வியாபாரி வீட்டில் NIA சோதனை... தீவிரவாத அமைப்பு ஆதரவாக செயல்பட்டதாக புகார்