திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்டதாக தேங்காய் வியாபாரி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2022 ஆம் ஆண்டு நெய்க்காரப்பட்டியில் தேங்காய் வியாபாரம் செய்து வந்த ராஜா முகமது என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது மூன்று ஆண்டுகளூக்கு பிறகு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. பழனி நகர காவல் நிலையத்தில் வைத்து ராஜா முகமதுவிடம் சோதனை நடத்த தேசிய புலனாய்வு முகமையினர், பின்னர் அவரை கைது செய்து கோவை அழைத்து சென்றனர்.