Also Watch
Read this
By: Manigandan Raja

மாவட்ட வன அலுவலர் கார் மோதி விபத்து :
திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலராக மகேந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய கார் திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி பகுதியில் அதிவேகமாக வந்துள்ளது.
அப்போது எதிர் திசையில் இரு சக்கர வாகனத்தில் வந்திருந்த கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த மணிவாசன் (30) மற்றும் அவரது மனைவி சாருமதி (23) மற்றும் குரும்பேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (20), மற்றும் அவரது மனைவி சந்தியா (20) உள்ளிட்ட நான்கு நபர்களுக்கும் இடுப்பு, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த மலைவாசன் மனைவி சாருமதி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக வயிற்றில் உள்ள குழந்தைக்கு எவ்வித பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். கால் முறிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved