Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தடம் எண் 70 ஜி அரசு பேருந்து வடபழனி நோக்கி கிளம்பியது.
அப்போது கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே திரும்பியபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரி,
பேருந்து மீது மோதி இடதுபுறம் திரும்பி, சாலையில் நின்று கொண்டிருந்த திமுக நிர்வாகி மீது ஏறியது. இதில் ராம் பிரசாத் என்பவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved