தூத்துக்குடியில் பெண்ணை கட்டையால் தாக்கி கொல்ல முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார். கணவனை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வரும் ஜெபா வயலட் என்ற பெண்ணிற்கு மாரிக்கனி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் போது ஜெபா வயலட்டை மாரிக்கனி கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஜெபா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.