Also Watch
Read this
By: Web Team

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட 10 அடி பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. புத்தாநத்தம் அருகே உள்ள அழகக்கவுண்டம்பட்டியை சேர்ந்த விவசாயி கண்ணுச்சாமி நிலத்தில், திடீரென 10 அடி ஆழத்துக்கு உறைகிணறுபோல மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், விஏஓ செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்க, அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தானாக ஏற்பட்ட பள்ளத்தை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved