பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள், தேன், பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.