சென்னை ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிடைத்த ஏழை மாணவிக்கு ஓய்வு பெற்ற காவல்துறையினர் சார்பில் 82 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம் கல்வராயன்மலையை அடுத்த கருமந்துறை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்துள்ளார். அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் படித்து இந்த சாதனை படைத்த மாணவிக்கு உதவி செய்யும் வகையில் ஓய்வு பெற்ற காவல்துறையினர் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.