தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியில் பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசியை சேர்ந்த கமலி என்பவரின் உடல் கடந்த 11 ஆம் தேதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரை கொலை செய்த கணவன் ஜான் கில்பர்ட் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.