திருச்சி மாவட்டம், முசிறி அருகே, விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை காட்டுப்புத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.