புகார் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 5 பேர் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அலைக்கழிப்பு செய்து வருவதாக கூறி மனு கொடுக்கும் இடத்தில் மனக்குமுறலை கொட்டி தீர்த்தனர்.