Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 4 வயது குழந்தையை கடத்திய விவகாரத்தில், குழந்தையின் தாத்தாவும், அவருடைய நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த ராஜா-மீனா தம்பதியின் குழந்தை கவிஷா கடந்த 30ஆம் தேதி அங்கன்வாடி மையத்திலிருந்து வீடு திரும்பாததையடுத்து, போலீசார் தேடி வந்தனர்.
கடந்த 4ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மர்ம நபர் ஒருவர் முதியவர் ஒருவரிடம் குழந்தையை ஒப்படைத்த நிலையில்,
அவரை ஞாயிற்றுக்கிழமை அன்று சங்ககிரியில் போலீசார் பிடித்துள்ளனர்.
ராஜா மது குடித்துவிட்டு குழந்தையை அடித்து துன்புறுத்தியதால், தாத்தா லோகிதாசு பாதுகாப்பாக தன்னிடம் ஒப்படைத்ததாக அந்நபர் கூறியதையடுத்து,
இருவரும் கைது செய்யப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved