கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் 45 அடி உயரம், 80 அடி நீளத்தில் பிரமீடு வடிவில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டுள்ளது. பாலப்பள்ளம் பகுதி இளைஞர்கள் உருவாக்கிய இந்த குடிலில், கிறிஸ்து பிறப்பு குறித்த காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.