நாட்டுப்புற பாடகியான கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக தனது 99வது வயதில் உயிரிழந்தார். சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடியைச் சேர்ந்த கருப்பாயி கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பல்வேறு பாடல்களையும் பாடிய கருப்பாயி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.