Also Watch
Read this
By: Manigandan Raja

பேச்சுவார்த்தையில் ஈரானுடன் இழுபறி :
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈரானுடன் இழுபறி நீடிப்பதால், அந்நாட்டை நோக்கி மற்றொரு விமானம் தாங்கி போர்க்கப்பல் விரைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஈரான் அருகே யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரீபியன் கடல் பகுதியில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் மத்திய கிழக்கு பகுதிக்கு புறப்பட உத்தரவிடப்பட்டது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved