அரசு முறை பயணமாக பிரேசிலியாவிற்கு சென்ற பிரதமருக்கு உயரிய விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்’ (( ‘Grand Collar of the National Order of the Southern Cross’, )) என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரேசிலியா சென்ற பிரதமர் மோடிக்கு அல்வோராடா மாளிகையில் 114 குதிரைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லூலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தார்.