கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணி வாடிகனில் நாளை துவங்குகிறது. Sistine Chapel என்ற தேவாலயத்தில் மூடப்பட்ட அறைகளில் ஒன்று கூடும் 133 கார்தினால்கள் சேர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய உள்ளனர். வாக்களிக்கும் உரிமை உள்ள இந்த 133 கார்தினால்களும் ஏற்கனவே வந்து சேர்ந்துள்ளனர். மூடப்பட்ட அறைகளில் பலகட்ட வாக்கெடுப்புக்கு பிறகு சுமார் 140 கோடி கத்தோலிக்கர்களின் புதிய போப் ஆண்டவர் யார் என்பது தெரிய வரும். தேர்தலின் போது கார்தினால்களின் அனைத்து தகவல் தொடர்பு உபகணரங்களும் அணைத்து வைக்கப்படும். தினமும் காலை, மாலை என இரண்டு முறை ரகசிய வாக்கெடுப்பு நடக்கும். ஒருமித்த தேர்வு எட்டப்பட்டால், ஆலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகையும், தேர்வு எட்டப்படா விட்டால் கரும் புகையும் வெளியேறும்.