Also Watch
Read this
Posted on: May 24, 2025 10:26 AM
By: Srini Vasan

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் அங்கீகாரத்தை ரத்து செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சுமார் 7 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் படித்து வரும் நிலையில், அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவு கல்வி மற்றும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, டிரம்ப் உத்தரவுக்கு எதிராக பாஸ்டன் நீதிமன்றத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. அதில், இது ஒரு சட்ட மீறல் எனவும், இதனால் 25 சதவீதம் வெளிநாட்டு மாணவர்கள் பேரழிவை சந்திப்பர் என்றும் கூறியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதிபர் ட்ரம்பின் ரத்து உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved