அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை காரணமாக, அங்குள்ள கவ்டலெப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அப்போது ஆற்றின் அருகே கோடை விடுமுறை முகாமில் பங்கேற்றிருந்த 7 முதல் 17 வயதிற்கு உள்பட்ட சிறுமிகள் 25 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் 9 சிறுமிகளும் அடங்குவர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய சிறுமிகளை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.