Also Watch
Read this
By: Manigandan Raja

தடம் புரண்ட பயணிகள் ரயில் :
சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு காரணமாக பயணிகள் ரயில் தடம் புரண்ட நிலையில், ரயிலில் இருந்த 80 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
வலைஸ் மாகாணத்தின் பிரிக் நகரிலிருந்து புறப்பட்ட ரயில், கோபென்ஸ்டைன் அருகே ஸ்டாக்ராபன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பனிச்சரிவில் சிக்கியது.
இதில், ரயிலின் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்ட நிலையில், தகவலறிந்து ஹெலிகாப்டர்களில் வந்த மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தின்போது, ரயிலில் இருந்த சுமார் 80 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved