தென்மேற்கு பருவமழை இன்று துவங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வுத் தறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி கேரளாவில் துவங்க கூடிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எட்டு தினங்கள் முன்னதாகவே துவங்கி உள்ளது.தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி படிப்படியாக வட மாநிலங்களுக்கு பரவும். தமிழ் நாட்டை பொறுத்தவரை மேற்கு கரையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென்மேற்கு பருமழை தீவிரமாக இருக்கும்.