Also Watch
Read this
Posted on: Jun 26, 2025 10:23 AM
By: Web Team

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை தனிச்சிறப்பு நீதிமன்றமாக நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
காயிதே மில்லத் அறக்கட்டளை தொடர்பாக அவதூறு பரப்பியதாக எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா மற்றும் முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமானுக்கு எதிராக தொடரபட்ட வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தை நாடிய போது, தமிழ்நாடு அரசு அளித்த விளக்கத்தை ஏற்று வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved