இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.முதல் போட்டி மழையால் ரத்து ஆன நிலையில், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. வியாழக்கிழமை நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.