Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 02:23 PM
By: Manigandan Raja

விஜய் மல்லையா பெருமிதம் :
RCB-யின் மதிப்பு 450 கோடியிலிருந்து 16 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்த நிலையில், அது தனது பைத்தியக்காரத்தனமான முதலீட்டின் வெற்றி என அணியின் முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது எக்ஸ் பதிவில், 2008-ல் தான் அணியை வாங்கியபோது, பெரும்பாலானோர் தம்மை பார்த்துச் சிரித்ததாகவும், தனது முதலீட்டை ஒரு பகட்டான திட்டம் என்று விமர்சித்தனர். ஆனால் இன்று அது அசல் மதிப்பை விட 37 மடங்காகப் பெருகியுள்ளதாக தெரிவித்துள்ள விஜய் மல்லையா RCB-யின் புதிய உரிமையாளர்களுக்கு வாழ்த்தும் கூறியுள்ளார்.
RCB-யின் இந்த பிரம்மாண்ட விற்பனை IPL வரலாற்றிலேயே மிக அதிக மதிப்புடையதாக கருதப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved