இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. லீட்சில் நடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 96 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இதையும் படியுங்கள் : வேலூரில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு..