அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த வழக்கில் தமிழக அரசு தலையிட்டிருப்பதாகக் கூறப்படும் விமர்சனத்தை ஏற்க இயலவில்லை எனவும், நேர்மையாக விசாரணை நடந்திருப்பதாக நம்புவதாகவும் தெரிவித்தார்.