அரசியில் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வேன் என்றும், ஆனால் கூட்டணி பற்றிய கேள்விக்கு ஒதுங்கி கொண்டு தொண்டனாக மட்டும் பணி செய்வேன் எனவும், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தேசிய அளவில் பாஜகவில் தங்களுக்கு பதவி கொடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு விரக்தியுடன் பதில் அளித்தார்.