ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ள சூழலில், குல்மார்க் பகுதியில் வானில் இருந்து மல்லிகை பூக்களை தூவியது போல் பனி கொட்டிய ரம்மியமான காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனை கண்டு உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள், புகைப்படங்கள் எடுத்தும், பனிக்கட்டிகளும் விளையாடியும் மகிழ்ந்தனர்.