மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கூறியதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தன்னை சங்கத்திலிருந்து தடை செய்ததற்கு உண்மையான காரணம் மீ டூ இயக்கத்தில் பேசியதே எனவும், இரு பெண்கள் நடிகர் ராதாரவியையே குற்றம் சாட்டி டுவிட் போட்டிருந்த நிலையில், அந்த டுவீட்டை தாம் பகிர்ந்ததாக தெரிவித்தார்.